வால்மார்ட் சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலி: அமெரிக்காவில் நேற்றிரவு பயங்கரம்

வாஷிங்டன்: அமெரிக்காவின் வர்ஜீனியாவின் ெசகாபீக்கில் உள்ள வால்மார்ட் சூப்பர் மார்க்கெட்டில் நேற்றிரவு துப்பாக்கியுடன் புகுந்த நபர், அங்கிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டான். இந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டதாகவும், மேலும் பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கொல்லப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்ட நிலையில், அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து செசாபீக் காவல்துறை அதிகாரி லியோ கோசிங்க்ஸ்கி கூறுகையில், ‘வால்மார்ட் சூப்பர் மார்க்கெட்டிற்கு வெளியே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 40க்கும் மேற்பட்ட அவசரகால வாகனங்களும் தயாராக உள்ளன. துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டான். துப்பாக்கி சூட்டில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் அடையாளம் காணப்பட்டனர்’ என்றார்.

Related Stories: