வாஷிங்டன்: அமெரிக்காவின் வர்ஜீனியாவின் ெசகாபீக்கில் உள்ள வால்மார்ட் சூப்பர் மார்க்கெட்டில் நேற்றிரவு துப்பாக்கியுடன் புகுந்த நபர், அங்கிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டான். இந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டதாகவும், மேலும் பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கொல்லப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்ட நிலையில், அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.