உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் தெருவில் கிடந்த 23 பவுன் நகையை மீட்டு, உரியவரிடம் ஒப்படைத்த முதியவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி, காந்தி விடுதி அருகே குடியிருப்பவர் நாகராஜ் (68). இவர் நேற்று பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவில் நடந்து சென்றார். அப்போது தெருவில் ஒரு துணிப்பை கிடந்தது. அதை எடுத்து பார்த்தபோது, 23 பவுன் நகை மற்றும் ரூ.4 லட்சம் முன் வைப்பு தொகைக்கான பாண்ட் ரசீது, மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி புத்தகம் ஆகியவை இருந்தது. உடனே கூட்டுறவு வங்கிக்கு சென்று, வங்கி மேலாளர் சிவகுமாரிடம் நகை மற்றும் பாண்ட் ரசீதை ஒப்படைத்தார்.