மதுரை : உசிலம்பட்டி அருகே கிராமத்தின் நடுவே செல்லும் 58 கால்வாய் நீரை மாற்று வழியில் கொண்டு செல்ல வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். பாறைப்பட்டி மதகில் இருந்து பாப்பாபட்டி கண்மாய்க்கு லிங்கப்பநாயக்கனூர் கிராமத்தின் நடுவே 58 கால்வாய் நீர் செல்கிறது. இந்நிலையில், ஏராம்பட்டி, வாய்ப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் கால்வாயை கடக்க முடியாமல் அவதிக்குள்ளாவதாக கூறப்படுகிறது.