கோத்தகிரி : நீலகிரி மாவட்டம் கோத்தகிரி உள்ளிட்ட நகர்புறபகுதி, நீர்நிலைகள், தேயிலை தோட்டங்கள்,விவசாய நிலங்களில் நீர்பனி கொட்டுகிறது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் நவம்பர் 15ம் தேதிக்கு பின் பனிக்காலம் துவங்கும்.கடந்த இரண்டு ஆண்டுகளாக பனிக்காலம் முறையான காலக்கட்டத்தில் துவங்காத நிலையில் அப்போதைய கால நிலைக்கு ஏற்றவாறு பருவமழையை தொடர்ந்து பனிக்காலம் துவங்கியது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக கோத்தகிரி நகர்புற பகுதிகளிலும்,நீர்நிலைகள்,விவசாய நிலங்கள், கிராமப்புற பகுதிகளில் நீர்பனி பெய்யத் தொடங்கியுள்ளது.