சென்னை: கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், ஓராண்டுக்கு 2,000 மின் இணைப்புகளை தட்கல் திட்டத்தில் வழங்க மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மின்வாரியம் சார்பாக அனைத்து பொறியாளர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு 12,524 கிராம பஞ்சாயத்துகளிலும், வேளாண் வளர்ச்சியை ஏற்படுத்த, அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி, தரிசு நிலங்கள் மற்றும் அதை ஒட்டிய புறம்போக்கு நிலங்களில் அமைக்கப்படும் ஆழ்துளை மற்றும் குழாய் கிணறுகளுக்கு, ‘தட்கல்’ எனப்படும் முன்னுரிமை அடிப்படையில் மின் இணைப்பு வழங்குமாறு வேளாண்துறை கேட்டுக்கொண்டது.