சென்னை: தமிழத்தில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின் படி, 100 நாட்களுக்குள் இலவச மின் இணைப்பு வழங்கும் பணிகளை முடிக்க வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குவது குறித்தும், வரும் கனமழைக்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. இதில், மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக இயக்குநர் ராஜேஷ் லக்கானி, மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். அப்போது, கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி விழாவில் அறிவித்தபடி, முதல் 100 நாட்களுக்குள் முடிக்கப்பட்டு 50,000 விவசாயிகளுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக கனமழை பெய்து முடித்த நிலையில், பாதிப்புகள் பற்றிய கணக்கெடுப்பு அவசியம் என அறிவுறுத்தினார்.