டி.டி.வி.தினகரனை வாய்ப்பு கிடைத்தால் சந்திப்பேன் வெகு விரைவில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும்: ஓபிஎஸ் அறிவிப்பு

சென்னை: வெகு விரைவில் அதிமுக பொதுக்குழு கூட்டம் எனது தலைமையில் நடைபெறும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார். டி.டி.வி.தினகரனை வாய்ப்பு கிடைத்தால் சந்திப்பேன் என்றும் அவர் தெரிவித்தார். அதிமுக ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வத்தை நேற்று சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் மாவட்ட வாரியாக புதிதாக நியமிக்கப்பட்ட அதிமுக   நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:

வெகு விரைவில் அதிமுக பொதுக்குழு கூட்டம் எனது தலைமையில் நடைபெறும். மாவட்ட, மாநில வாரியாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த பணிகள் முழுமை அடைந்த பின்னர் கட்சியின் பொதுக்குழு கூட்டம் கூட்டப்படும். அதனை தொடர்ந்து மாவட்ட ரீதியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். அமமுக தலைவர் டி.டி.வி.தினகரனை வாய்ப்பு கிடைத்தால் சந்திப்பேன்.

மதுரை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை சந்தித்ததும், சென்னை கலைவாணர் அருகில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை  சந்தித்ததும் மரியாதை நிமித்தமானது. இந்த சந்திப்பு அரசியல் ரீதியானது அல்ல. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், துணை ஒருங்கிணைப்பாளர் ஜெ.சி.டி.பிரபாகர் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: