திருவண்ணாமலை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டம் கடந்த 3 நாட்களாக திருவண்ணாமலையில் நடந்தது. இது தொடர்பாக, அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அளித்த பேட்டி: மின்சார மசோதாவால் இலவச மின்சாரம் பறிபோகும் ஆபத்து உள்ளது. மின் கட்டணத்தை தனியார் முடிவு செய்யும் ஆபத்தும் இருக்கிறது. சட்ட வரம்புகளை மீறி தமிழக ஆளுநர் செயல்படுகிறார். அவர் சார்ந்த அரசியல் குறித்து பேசுகிறார். போட்டி அரசாங்கத்தை தமிழகத்தில் நடத்துகிறார். பாஜக அல்லாத கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில், ஆளுநர்களை முன்னிறுத்தி பாஜக போட்டி ஆட்சியை நடத்துகிறது. எனவே, தமிழக ஆளுநரை ஒன்றிய அரசு திரும்பப்பெற வேண்டும்.