காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில், ஒன்றிய அரசின் இந்தி திணிப்பால் ஏற்படும் விளைவு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி வேடந்தாங்கல் கிராமத்தில் நேற்று நடந்தது. அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் தம்பு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் கிராமப்புறங்களில் வீதி வீதியாக சென்று, இந்தி திணிப்பால் ஏற்படும் விளைவு மற்றும் இந்தி எதிர்ப்பு தீர்மான விளக்க குறித்து வியாபாரிகள், கல்லூரி மாணவ, மாணவிகள், மகளிர் சுய உதவிக்குழு பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களை வழங்கினர்.