திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக மேல்விளாகம், கலியனூர், மணவூர், விடையூர், நெமிலி அகரம் உள்ளிட்ட கிராம மக்கள் 20 கிமீ தூரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பணியை ஆய்வு செய்து விரைந்து முடிக்க வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ அறிவுறுத்தினார். அதிமுக ஆட்சியில் 2016-17ம் ஆண்டு ரூ.3.60 கோடி திட்ட மதிப்பீட்டில் மேம்பால பணிகள் தொடங்கியது. இந்த பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டு முடிக்கப்படாமல் இருந்தது. தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் அத்தியாவசிய பணிகளுக்காக செல்லும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.