திருவொற்றியூர்: சென்னை திருவொற்றியூர், மஸ்தான் கோயில் தெருவை சேர்ந்தவர் அசோக் (60). இவர், கிராம தெருவில் ஒரு வாடகை கட்டிடத்தில் நகைக் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்து அசோக் கடையை பூட்டிவிட்டு வீடு திரும்பியுள்ளார். நள்ளிரவில் அசோக்கின் நகைக் கடை சுவரில் துளையிடும் சத்தம் மேல்மாடியில் குடியிருந்தவர்களுக்கு கேட்டது. அவர்கள் கீழே இறங்கி வந்து பார்த்தபோது, நகைக் கடையின் சுவரில் ஒரு மர்ம நபர் சுத்தியலால் அடித்து துளையிடுவதை பார்த்து அலறி சத்தம் போட்டனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவருவதை பார்த்து, அந்த மர்ம நபர் தப்பி ஓடிவிட்டார்.