தமிழ்நாட்டில் நாளை மறுநாள் 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் நாளை மறுநாள் 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

நவம்பர் 21, 22ல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு:

தமிழ்நாட்டில் நவம்பர் 21, 22 தேதிகளில் 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. நவம்பர் 21ம் தேதி வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நவம்பர் 22ம் தேதி திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யக்கூடும்.

நவம்பர் 21ல் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு:

நவம்பர் 21ல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன்படி, திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நவம்பர் 22ல் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு:

நவம்பர் 22ல் 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலையில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

இன்று வங்கக்கடலின் தென்மேற்கு, மத்திய பகுதிகளில் பலத்த சூறாவளி வீசக்கூடும். நாளை வங்கக்கடலின் தென்மேற்கு, தென்கிழக்கு, மத்திய மேற்கு பகுதிகளில் பலத்த சூறாவளி வீசக்கூடும். 20, 21 தேதிகளில் தெற்கு ஆந்திரா, தமிழ்நாடு - புதுச்சேரி மற்றும் இலங்கை கடலோரப் பகுதிகளில் சூறாவளி வீசும். வங்கக்கடலின் தென்மேற்கு, மத்திய மேற்கு பகுதிகளில் பலத்த சூறாவளி வீசக்கூடும். 21ல் தமிழ்நாடு - தெற்கு ஆந்திரா கரையோரப் பகுதிகளில் பலத்த சூறாவளி வீச வாய்ப்புள்ளது. மணிக்கு 40  - 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி வீச வாய்ப்புள்ளதால் மீனவர்களுக்கு இன்று முதல் 4 நாட்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: