தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த மிட்டாசின்னஅள்ளி கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி. இவள் இண்டூர் அருகே உள்ள கிராமத்தில் பாட்டி வீட்டில் தங்கி அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். தினமும் பள்ளிக்கு மாணவி சைக்கிளில் சென்று வருவது வழக்கம். நேற்று முன்தினம் வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற மாணவி மாலையில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தாள். அப்போது பைக்கில் வந்த 2 வாலிபர்கள் வழிமறித்து மாணவியை காட்டுப்பகுதிக்குள் தூக்கிச்சென்று பலாத்காரம் செய்துள்ளனர். இந்நிலையில் மாணவி வீடு திரும்பாததால் உறவினர்கள் தேடி வந்தனர். மாணவி வழக்கமாக வரும் ஒத்தையடி பாதையில் உறவினர் ஒருவர் தேடிச்சென்றபோது வழியில் மாணவியின் சைக்கிள் கிடந்தது.