சென்னை: மறைந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க நேற்று தமிழக பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் நேரில் வந்தனர். பிரியாவின் இல்லத்துக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த அவரின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, பிரியாவின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தனர். பின்னர், அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது: பிரியாவின் இழப்பு யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத இழப்பு. பல அரசு மருத்துவமனைகள் இன்று இந்த நிலையில் தான் இருக்கிறது. பிரியாவுக்கு பிரதமர் நரேந்திர மோடியை பார்க்க வேண்டும் என்று ஆசை இருந்ததாக பிரியாவின் பெற்றோர் தெரிவித்தனர்.