மும்பை: தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் உரிமைகள் பெறுவதை பாஜக விரும்பவில்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார். தமிழ்நாட்டில் யாத்திரையை தொடங்கிய ராகுல், இதுவரை 6 மாநிலங்களில் 28 மாவட்டங்களில் பயணத்தை நிறைவு செய்துள்ளார். இந்நிலையில், மகாராஷ்டிராவின், வாஷி மாவட்டத்தில் இந்திய ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டிருக்கும் ராகுல் காந்தி, பழங்குடியின சுதந்திர போராட்ட வீரர், பிர்சா முண்டாவின் பிறந்தநாளை ஒட்டி நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.