இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புக்கு மூன்றாவது முறையாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. எகிப்தில் நடந்த பருவநிலை மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கலந்து கொண்டார். இந்த மாநாட்டிற்கு பிறகு தனது சகோதரர் நவாஸ் ஷெரீப்பை சந்திப்பதற்காக லண்டன் சென்றார். பின்னர், நேற்று முன்தினம் அவர் பாகிஸ்தான் திரும்பினார். இந்நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.