திருவனந்தபுரம்: கவர்னர் பதவி ஒரு ரப்பர் ஸ்டாம்ப் பதவி அல்ல என்று கேரள சட்டமன்றத்தில் நேற்று நடந்த லோகாயுக்தா தின விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி பேசினார். திருவனந்தபுரத்தில் உள்ள கேரள சட்டமன்ற வளாகத்தில் நேற்று லோக் ஆயுக்தா தின விழா நடந்தது. இந்த விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கேரள சட்டம் மற்றும் தொழில்துறை அமைச்சர் ராஜீவ் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கேரள எதிர்க்கட்சித் தலைவர் சதீசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.