போர்ட்-ஓ-பிரின்ஸ்: கரீபியன் நாடுகளின் ஒன்றான ஹைதியில் அமெரிக்க தூதரக செயல்பட்டு வருகிறது. தூதரக வாகனங்கள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த சம்பவத்தில் அமெரிக்க தூதரக ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து போலீஸ் தகவல் அதிகாரி கேத்ரின் எட்வர்ட்ஸ் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்க தூதரக கான்வாய் வாகனம் மீது மர்ம நபர் துப்பாக்கி சூடு நடத்தியதில், ஹைதியை சேர்ந்த டிரைவர் காயமடைந்தார்.