விர்ஜீனியா: அமெரிக்காவின் வாஷிங்டன் நகருக்கு சுற்றுலா சென்று விட்டு மாணவ மாணவிகள் விர்ஜீனியா பல்கலைக்கழகத்திற்கு பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தனர். பேருந்தை நோக்கி மர்ம நபர் திடீரென துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்தில், மாணவர்களாகிய 3 கால்பந்து வீரர்கள் பலியானதாக தெரிய வந்துள்ளது. காயமடைந்த 2 பேரில் ஒருவரது நிலைமை மோசமடைந்து உள்ளது. துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பின்னர் பல்கலைக்கழக வளாக பகுதியில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.