சேத்தியாத்தோப்பு: கோதண்டவிளாகம் கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதியடைந்து உள்ளனர். சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கோதண்ட விளாகம் கிராமத்தில், காமராஜர் நகரில் 50க்கும் மேற்கண்ட குடியிருப்புகளும் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகளும் வசித்து வருகின்றனர். வட கிழக்கு பருவ மழையின் காரணமாக காமராஜ் நகரில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இயல்புநிலை திரும்புவதற்கு அதிக நாட்கள் ஆகும் என பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.