விருதுநகர்: விருதுநகர் - அருப்புக்கோட்டை அருகே அரசுப் பேருந்தில் பயணம் செய்தபோது தவறி விழுந்து கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அருப்புக்கோட்டையில் இருந்து விருதுநகர் செல்லும் அரசு பேருந்தில் இன்று கல்லூரி செல்வதற்காக வெள்ளையாபுரத்தை சேர்ந்த மாதேஷ்வரன் என்ற மாணவர் படிக்கெட்டில் பயணம் செய்துள்ளார். பாலவநத்தம் அருகே வளைவில் பேருந்து சென்று கொண்டிருந்த போது, மாணவர் மாதேஷ், கை தவறி பேருந்தில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதனால் பின்புறம் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்த வெள்ளத்தில் மாணவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.