ஊட்டி: வாக்குச்சாவடிகளில் நடைபெறும் சிறப்பு முகாமினை திமுக மாவட்ட செயலாளர் ஆய்வு செய்தார். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல் போன்ற பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் சார்பில் சிறப்பு முகாம் நேற்றும், இன்றும் நடக்கிறது. மேலும், வரும் 26 மற்றும் 27 ஆகிய இரு நாட்கள் நடக்கிறது. இந்த வாக்காளர் பட்டியல் சரி பார்ப்பு முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என திமுக தலைமை அறிவித்திருந்தது. இதற்கு ஏற்றார் போல், அனைத்து வாக்குச் சாவடிகளிலும் திமுக சார்பில் நியமிக்கப்பட்டிருந்த முகவர்கள் கலந்து கொண்டனர்.