புதுடெல்லி: இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டை வரும் 15ம் தேதி விண்ணில் ஏவ இருப்பதாக ஐதராபாத்தின் ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்திய விண்வெளி துறையில் தனியார் நிறுவனங்களும் பங்கேற்கலாம் என கடந்த 2020ம் ஆண்டு ஒன்றிய அரசு அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து, விண்வெளி துறையில் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாகின. இந்நிலையில், ஐதராபாத்தை சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் இந்தியாவில் முதல் முறையாக விக்ரம்-எஸ் எனும் தனியார் ராக்கெட்டை விண்ணில் ஏவ உள்ளது.