காந்தி கிராம பல்கலை. பட்டமளிப்பு விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா, மிருதங்க வித்வான் சிவராமன் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார் பிரதமர் மோடி

திண்டுக்கல்: காந்தி கிராம பல்கலை. பட்டமளிப்பு விழாவில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார். இசையுலகில் இளையராஜா ஆற்றிய சேவையை பாராட்டி அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் 36வது பட்டமளிப்பு விழா , காந்திகிராம நிறுவனத்தின் பவள விழா இன்று நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு மாணவ, மாணவிகள் உள்பட 2,314 பேருக்கு பட்டங்களை வழங்கினார்.

இந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி பெங்களூருவிலிருந்து தனி விமானம் மூலம் பிற்பகல் 2 மணிக்கு மதுரை வந்தடைந்தார். பின்னர் மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மாலை 3 மணிக்கு திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரைக்கு வந்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளித்தனர்.

பின்னர் பிரதமர் மோடி அவர் கார் மூலம் காந்திகிராமம் பல்கலைக்கழகத்துக்கு வந்தடைந்தார். பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற அவர்  இசைஞானி இளையராஜாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தார். மேலும் பட்டமளிப்பு விழாவில் மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தார் பிரதமர் மோடி. பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

Related Stories: