தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும்: சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேட்டி

சென்னை: தமிழகம், புதுவை, காரைக்காலில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். கடலூர், டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 21 இடங்களில் கனமழை பதிவாகியுள்ளது. சென்னை மற்றும் புறநகரில் இன்றும் நாளையும் மிக கனமழை பெய்யும் என பாலச்சந்திரன் தெரிவித்தார்.

Related Stories: