2024 அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பம்: ஜோ பைடன் அறிவிப்பு

வாஷிங்டன்: 2024ம் ஆண்டு தேர்தலில் போட்டியிடுவதற்கு விரும்புவதாக அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,‘தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதே எங்களது நோக்கமாகும். இந்த தேர்தலில் முடிவு எதுவாக இருந்தாலும் மீண்டும் போட்டியிட வேண்டும் என்பது தான் எங்களது எண்ணம். ஜனநாயக கட்சி மக்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக செயல்பட்டது. 2024ம் ஆண்டு அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட வேண்டும் என்று அனைவரும் விரும்புவதாக நான் கருதுகிறேன். மீண்டும் தேர்தலில் போட்டியிடவேண்டும் என்பதே எனது விருப்பம். ஆனால் நான் விதியை மிகவும் மதிக்கக்கூடிய ஒரு நபர். எனவே இது இறுதியில் குடும்பத்தின் முடிவாக இருக்கும்.  கிறிஸ்துமஸ்-புத்தாண்டுக்கு பின்னர் இது குறித்து முடிவு வரக்கூடும்’ என்றார்.

Related Stories: