பல்லாவரம்: மாங்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக, மாங்காட்டில் இருந்து மலையம்பாக்கம் செல்லும் பிரதான சாலையிலும் பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது. இந்த பள்ளத்தில் அதிக அளவில் மழைநீர் தேங்கி இருந்தது. நேற்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் எதேச்சையாக உள்ளே பார்த்தபோது, அங்கு ஒருவர் இறந்த நிலையில் தலை குப்புற கவிழ்ந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து, உடனடியாக மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், இறந்த உடலை மீட்டு, அதனை பிரேத பரிசோதனைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு அனுப்பினர்.