தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெறக் கோரி குடியரசு தலைவரிடம் திமுக, கூட்டணி கட்சிகள் மனு

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெறக் கோரி குடியரசு தலைவரிடம் திமுக, கூட்டணி கட்சிகள் மனு அளித்துள்ளனர். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கோரிக்கை மனு ஜனாதிபதி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்துசர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவதாக திமுக, கூட்டணி கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் நீண்டகாலமாக நிலுவையில் வைத்துள்ளதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: