சென்னை: பிலிப்பைன்ஸ் வியட்நாம் கடற்பகுதியில் கப்பல் விபத்தில் சிக்கிய பயணிகளை மீட்க இந்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு வைகோ வலியுறுத்தியுள்ளார். இந்திய வெறியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு மதிமுக பொதுச்செயலளார் வைகோ எம்.பி. எழுதியுள்ள கடிதத்தில்; பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் கடற்பகுதியில் விபத்துக்குள்ளான கப்பலை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். விபத்தில் சிக்கிய இந்தக் கப்பலில் 306 இலங்கை அகதிகள் பயணித்துள்ளனர்.