கொளத்தூர் தொகுதியில் நான்காவது நாளாக பொது மருத்துவ முகாம்களை தொடங்கி வைத்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பார்வையிட்டார். திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கொளத்தூர் தொகுதியில் அப்போலோ மருத்துவமனை மற்றும் கற்பக விநாயகா மருத்துவமனையின் மூலமாக கட்டணமில்லா பொது மருத்துவ முகாம்கள் கடந்த நான்கு நாட்களாக நடத்தப்படுகின்றன. இன்று கொளத்தூர், ஒத்தவாடை தெரு, கே.சி.கார்டன், பாலவாயில் தெரு எம்.எம். திருமண மண்டபம், பாரத் ராஜிவ் காந்தி நகர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பொது மருத்துவ முகாம்களை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே. சேகர்பாபு தொடங்கி வைத்தார்.