சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1ம் தேதி தொடங்கி டிசம்பர் 31 வரை பெய்யும் என்பதை கடந்த கால அதிமுக ஆட்சியாளர்கள் உணராத காரணத்தால் 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப் பெருக்கினால் நிகழ்ந்த உயிரிழப்புளும், பாதிப்புகளும் வார்த்தைகளால் வடிக்க இயலாது. அன்றைய அரசிடம் முறையான நீர் மேலாண்மை இல்லாத காரணத்தால் இத்தகைய பாதிப்புகள் கடந்த காலங்களில் ஏற்பட்டன.