சென்னை: காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், மதுராந்தகம் வடக்கு ஒன்றிய திமுக மற்றும் கருங்குழி பேரூராட்சி திமுக சார்பில், பொது உறுப்பினர்கள் கூட்டம் மேலவளம்பேட்டை கிராமத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, ஒன்றிய செயலாளர் படாளம் சத்யசாய் தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் தசரதன், துணை தலைவர் சங்கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூர் செயலாளர் சுந்தரமூர்த்தி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் எம்பி ஜி.செல்வம், மாவட்ட ஊராட்சிக்குழு பெருந்தலைவர் செம்பருத்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மதுராந்தகம் மேலவளம்பேட்டையில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்: எம்எல்ஏ க.சுந்தர், எம்பி செல்வம் பங்கேற்பு
- திஜாகம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கூட்டம்
- மதுராந்தகம்
- மலவலம்பேட்டி
- சட்டமன்ற உறுப்பினர்
- கே. சுந்தரர்