புதுடெல்லி: புதிய கலால் கொள்கை முறைகேடு தொடர்பாக டெல்லி முதல்வர் சிசோடியாவின் உதவியாளரை அமலாக்கத்துறை கைது செய்து உள்ளது. டெல்லியில் நடைமுறைபடுத்தப்பட்டு திரும்ப பெறப்பட்ட புதிய கலால் கொள்கை முறைகேடு தொடர்பாக துணை முதல்வர் சிசோடிய உள்ளிட்ட 14 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணபரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதுதொடர்பாக துணை முதல்வர் சிசோடியா வீடு, வங்கி லாக்கர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனையும் நடத்தியது. சிசோடியாவிடம் சிபிஐ விசாரணை நடத்தியது.
இந்நிலையில், சிசோடியாவின் உதவியாளர் தேவேந்திர சர்மாவின் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை நேற்று அதிரடி சோதனை நடத்தியது. சோதனைக்கு பிறகு தேவேந்திர சர்மாவிடம் அமலாக்கத்துறை அதிகரிகள் விசாரணை நடத்தி கைது செய்தனர்.