சென்னை: நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் உள்ள பாதாள அறைக்கு ரகசியமாக இரவு நேரத்தில் அதிகளவில் வாலிபர்கள் வந்து செல்வதாக, நுங்கம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் ேநற்று முன்தினம் நள்ளிரவு அந்த அடுக்குமாடி கட்டிடத்தின் பாதாள அறையில் அதிரடி சோதனை நடத்தினர். அதில், தடை செய்யப்பட்ட ஹூக்கா பார் நடத்தியது தெரியவந்தது. அங்கு சினிமா பாடலுக்கு நடனமாடிய இளம் ஜோடிகளை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.