நுங்கம்பாக்கத்தில் பாதாள அறையில் ஹூக்கா பார் நடத்தியவர் கைது

சென்னை: நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் உள்ள பாதாள அறைக்கு ரகசியமாக இரவு நேரத்தில் அதிகளவில் வாலிபர்கள் வந்து செல்வதாக, நுங்கம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் ேநற்று முன்தினம் நள்ளிரவு அந்த அடுக்குமாடி கட்டிடத்தின் பாதாள அறையில் அதிரடி சோதனை நடத்தினர். அதில், தடை செய்யப்பட்ட ஹூக்கா பார் நடத்தியது தெரியவந்தது. அங்கு சினிமா பாடலுக்கு நடனமாடிய  இளம் ஜோடிகளை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

ஹூக்கா பார் நடத்திய முஸ்தக் அகமது (51) என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் தொடர்ந்து ஹூக்கா பார் நடத்தி 5 முறை கைது செய்யப்பட்டவர் என தெரியவந்தது. போலீசாரின் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டு வந்ததால், ஹூக்கா பார் நடத்திய பாதாள அறையை போலீசார் அரசு அதிகாரிகள் உதவியுடன் சீல் வைத்து மூடினர். மேலும், பாரில் இருந்து போதை வஸ்துக்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: