ராஞ்சி: ஜார்கண்டில் பிறந்து 21 நாளே ஆன குழந்தையின் வயிற்றில் 8 கருக்கள் இருந்த நிலையில், அவை அறுவை சிகிச்சை மூலமாக அகற்றப்பட்டது. ஜார்கண்ட் மாநிலம், ராம்கர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் 10ம் தேதி பெண் ஒருவருக்கு குழந்தை பிறந்தது. அதை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தையின் வயிற்றில் நீர்க்கட்டி போன்ற திசுக்கள் இருப்பதாக தெரிவித்தனர். அவற்றை உடனடியாக அறுவை சிகிச்சை செய்யும்படி பரிந்துரை செய்தனர். இதைத் தொடர்ந்து, 21 நாட்களே ஆன நிலையில் அந்த குழந்தை, ராணி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. கடந்த 1ம் தேதி குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.