டெல்லி: 24 மணி நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் என்னை அணுகலாம் என தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டத்தில் நரேந்திர மோடி கூறியுள்ளார். எந்தெந்த கட்சிக்கு எந்தெந்த துறைகள் என ஊடகங்களில் இருந்து பல கணிப்புகள் வருகிறது, பிரேக்கிங் செய்திகளை நம்பி இந்த நாடு செயல்படாது என மோடி கூறினார்.