இஸ்ரேல்: இஸ்ரேல் முன்னாள் பிரதமர் பெஞ்சவின் நெதன்யாகு மீண்டும் ஆட்சியை பிடித்திருக்கும் நிலையில், அவரது வெற்றி பாலஸ்தீனியர்கள் மற்றும் அரபு நாடுகளிடையே ஒருவிதமான பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் 1948 முதல் அங்கீகரிக்கப்பட்ட நாடாக இருக்கிறது. ஆனால் அதன் அருகே இருக்கும் பாலஸ்தீனம் அங்கீகாரத்திற்கு போராடி வருகிறது. இதனால் இருதரப்புக்கு இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. அவ்வப்போது ஏற்படும் தாக்குதல்களில் சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. இஸ்ரேலில் உள்ள அரபு கட்சிகள், பொதுவாக வலதுசாரி பிரதமருக்கு ஆதரவு அளித்தது இல்லை. பெஞ்சவின் நெதன்யாகு மீதான கோவம் காரணமாக 2019 முதல் நெதன்யாகுவின் எதிர்தரப்புக்கு அவர்கள் ஆதரவு தெரிவித்து வந்தனர்.