ஊட்டி: ஊட்டி அருகே பசுமாட்டை புலி வேட்டையாடிய வீடியோ வைரலாகி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. ஊட்டி-கூடலூர் சாலையில் உள்ள எச்பிஎப் பகுதியில் நேற்று முன்தினம் மாலை வனத்தை ஒட்டி பசுமாடு மேய்ச்சலில் ஈடுபட்டிருந்தது. அப்போது புலி அங்கு வந்து பசுமாட்டை தாக்கி கொன்றது. இதனை பார்த்து குடியிருப்புவாசிகள் சத்தம் எழுப்பியதால் அதனை அப்படியே விட்டுட்டு வனத்திற்குள் சென்று மறைந்தது. இந்நிலையில் நேற்று காலை 7 மணியளவில் வேட்டையாடியை பசு மாட்டை சாப்பிடுவதற்காக அப்பகுதிக்கு வந்துள்ளது.