புதுடெல்லி: காஷ்மீர் இணைப்பு விவகாரத்தில் முன்னாள் பிரதமர் நேருவை விமர்சித்த ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூவை கண்டிக்காமல், அவருக்கு ஆதரவாக கரண் சிங் செயல்படுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. இந்தியாவுடன் காஷ்மீர் இணைக்கப்பட்ட விவகாரத்தில், ‘நேருவின் 5 பிழைகள்’ என்ற தலைப்பில் ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜுஜூ சமீபத்தில் கட்டுரை ஒன்றை எழுதினார். நேருவை விமர்சித்த ரிஜுஜூக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், பிரபல ஆங்கில நாளிதழில் ஜம்மு காஷ்மீரின் மன்னர் ஹரி சிங்கின் மகனும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான கரண் சிங், ஜம்மு காஷ்மீர் இணைப்பு குறித்து கட்டுரை எழுதியுள்ளார்.