கரூர்: தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இருக்கும் வணிக நிறுவனங்களில் 2வது நாளாக வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். தீபாவளி பண்டிகை காலங்களில் வரி ஏய்ப்பு செய்ததாக கிடைத்த தகவல் அடிப்படையில், மாநிலத்தின் பல்வேறு இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருக்கிறார்கள். கரூரில் உள்ள பிரபல ஜவுளி நிறுவனமான சிவா டெக்ஸ் குழுமத்திற்கு சொந்தமான 5 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று காலை தொடங்கி இரவு வரை சோதனை மேற்கொண்டனர்.