ஊட்டி: தேசிய அளவில் நடந்த ஹாக்கி போட்டியில் தமிழ்நாடு அணியில் ஊட்டி கிரசன்ட் கேசில் பள்ளி மாணவர்கள் 27 பேர் பங்கேற்றனர். டில்லி ஐசிஎஸ்இ சார்பில் தேசிய அளவிலான ஹாக்கி போட்டி கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடந்தது. 14, 17 மற்றும் 19 வயதிற்குட்பட்டோருக்கான போட்டிகள் நடந்தது. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் 14 வயது பிரிவில் இறுதி போட்டிக்கு தேர்வாகி, பஞ்சாப் அணியுடன் மோதியது.
இதில், 5-1 என்ற கோல் கணக்கில் தமிழ்நாடு அணி வெற்றி பெற்றது. தமிழ்நாடு அணியில் இடம் பெற்ற 18 பேரில், 13 மாணவர்கள் ஊட்டி கிரசன்ட் கேசில் பள்ளியை சேர்ந்த மாணவர்கள்.