சங்கராரெட்டி: தெலுங்கானாவில் ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி, பழங்குடியின மக்களுடன் சேர்ந்து பாரம்பரிய நடனமாடினார். நாடு முழுவதும் ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி, சங்கராரெட்டி மாவட்டம் ருத்ராராம் என்ற இடத்தில் இருந்து இன்றைய பயணத்தை தொடங்கினார். முன்னதாக ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா மாநிலங்களின் பழங்குடியின கலைஞர்கள் பாரம்பரியமிக்க திம்சா நடனமாடி ராகுலுக்கு வரவேற்பு அளித்தனர். அப்போது கலைஞர்களுடன் சேர்ந்து ராகுல் காந்தியும், உற்சாகமாக நடனமாடினார்.