சென்னை: தேவர் ஜெயந்தி விழாவில் சிறு மோதல் சம்பவங்கள் கூட இல்லாமல் சிறப்பாக பாதுகாப்பு பணி மேற்கொண்ட 10 ஆயிரம் போலீசாருக்கு டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழக டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டின் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வான தேவர் ஜெயந்தி விழா கடந்த 30ம் தேதி நடைபெற்றது. சட்டம் ஒழுங்கு காவல்துறை கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் மேற்பார்வையில் தென் மண்டல ஐஜி அஸ்ரா கர்க், மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் தலைமையில் ராமநாதபுரம் சரக டிஐஜி மயில்வாகனன், 24 மாவட்ட எஸ்பிக்கள் உட்பட 10 ஆயிரம் காவல் அதிகாரிகள் மற்றும் போலீசார் ஒரு சிறு மோதல் சம்பவம் கூட ஏற்படா வண்ணம் நல்ல முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்து முடித்துள்ளீர்கள்.