புதுடெல்லி: வாட்ஸ் அப்-பில் இருந்து, கடந்த செப்டம்பரில் மட்டும் இந்தியாவில் 26 லட்சத்துக்கும் அதிகமான போலிக் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளது. ‘மெட்டா’ நிறுவனத்துக்குச் சொந்தமான வாட்ஸ் அப்பில் 500 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஒன்றிய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதியின்படி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இந்தியாவில் 23 லட்சத்திற்கும் அதிகமான மோசடி செய்யும் கணக்குகள் முடக்கப்பட்டது. தொடர்ந்து செப்டம்பர் மாதத்தில் திருத்தப்பட்ட புதிய ஐடி விதிகளின் கீழ், மேலும் 26.85 லட்சத்துக்கும் அதிகமான கணக்குகள் முடக்கப்பட்டது.