சென்னை: மனைகள் உருவாக்க தொழிற்பிரிவில் தென்னிந்தியாவின் புகழ்பெற்ற மிகப்பெரிய நிறுவனம் ஜி ஸ்கொயர். சென்னை, பெங்களூரு, ஐதராபாத், கோயம்புத்தூர், திருச்சி, ஓசூர், மைசூர் மற்றும் பல்லாரி ஆகிய நகரங்களில் 800 பணியாளர்களுடன் ஜி ஸ்கொயர் நிறுவனம் இயங்கி வருகிறது. தீபாவளி திருவிழாவை வித்தியாசமான முறையில் வியப்பும், மகிழ்ச்சியும் கலந்த நிகழ்வாக, தனது நிர்வாக பணியாளர்களுக்கு மாற்றி இருக்கிறது ஜி ஸ்கொயர். அந்த வகையில், நிறுவனத்தின் வளர்ச்சிக்காக வெளிப்படுத்தியிருக்கும் அர்ப்பணிப்பு உணர்வுக்காகவும், ஆற்றியிருக்கும் கடுமையான உழைப்பிற்காகவும் பாராட்டையும், அங்கீகாரத்தையும் வெளிப்படுத்தும் ஒரு அடையாளமாக 17 பணியாளர்களுக்கு ஜி ஸ்கொயர் ரியால்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் கார்களை பரிசாக வழங்கியிருக்கிறது. இதில், பிஎம்டபிள்யூ 520 டி எம்ஸ்போர்ட், கியா கேரென்ஸ், போக்ஸ்வேன் விர்டஸ், கியா செல்டோஸ், கியா சானெட், ஹூண்டாய் கிரேட்டா, மாருதி எக்ஸ்எல்6 மற்றும் மாருதி எர்டிகா ஆகிய கார்களும் அடங்கும்.