முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் மம்தா பானர்ஜி நாளை சந்திப்பு

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நாளை சந்தித்து பேசுகிறார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், ‘‘தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை, அவரது முகாம் அலுவலகத்தில் நாளை (புதன்கிழமை) மாலை, தமிழ்நாட்டிற்கு வருகை புரியும் மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் சந்தித்து பேச உள்ளார்’’ என கூறப்பட்டுள்ளது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, நாளை மாலை 5 மணிக்கு கொல்கத்தாவில் இருந்து தனிவிமானத்தில் ய விமானநிலையம் வருகிறார். அதன்பின்பு சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார். பின்னர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசுகிறார். பின்பு கொல்கத்தா புறப்பட்டுச் செல்கிறார்.    

Related Stories: