சீரடி, நாசிக் செல்லும் விமானங்கள் ரத்து

சென்னை: சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து நேற்று பிற்பகல் 2.40 மணிக்கு மகாராஷ்டிர மாநிலம் சீரடி செல்ல வேண்டிய பயணிகள் விமானம், அதே விமானம் சீரடியிலிருந்து மாலையில் 4:50க்கு புறப்பட்டு மாலை 6:40க்கு சென்னை வரவேண்டிய விமானம் நேற்று ரத்துசெய்யப்பட்டன. இதேபோல் நேற்று இரவு 7.10க்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து நாசிக் செல்லும் விமானம், அதைபோல் இரவு மணிக்கு 9.20 மணிக்கு நாசிக்கில் இருந்து புறப்பட்டு, இரவு 11 20 மணிக்கு சென்னை வரும் விமானமும் ரத்துசெய்யப்பட்டன. சென்னை விமான நிலையத்தில் ஒரேநாளில் இரண்டு புறப்பாடு விமானங்கள், இரண்டு வருகை விமானங்கள் என 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, போதிய பயணிகள் இல்லாததால் விமானங்கள் ரத்துசெய்யப்பட்டன என்றனர்.

Related Stories: