திருமலை: ‘விரைவில் அரசியலுக்கு வருவேன்,’ என நடிகை நமீதா கூறினார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை நமீதா தனது குடும்பத்தினருடன் நேற்று சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் சுவாமி தரிசனம் செய்து வைத்து, ரங்கநாதர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர். பின்னர், கோயிலுக்கு வெளியே வந்த நமீதாவுடன் அவரது ரசிகர்கள் செல்பி எடுத்துக் கொண்டனர்.