புதுடெல்லி: ‘வரும் 2024-ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்காக பொது சிவில் சட்டம் அமல்படுத்துவதை பாஜ தாமதப்படுத்துகிறதா?’ என்று அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார். குஜராத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்காக இம்மாநிலத்தில் ஆட்சி செய்யும் பாஜ அரசு முடிவு செய்துள்ளது. சட்டப்பேரவை தேர்தலில் வாக்காளர்களை கவரவே, இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று அளித்த பேட்டியில், ‘இந்திய அரசியல் சட்டம் 44வது விதியின் கீழ் பொது சிவில் சட்டத்தை உருவாக்குவது ஒன்றிய அரசின் பொறுப்பு.