சென்னை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிவிப்பு:
தமிழக பாஜவில் மாவட்டங்கள் மறுசீரமைக்கப்பட்டு, புதிய மாவட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் சோழிங்கநல்லூர்(பரங்கிமலை கிழக்கு, மேற்கு மண்டல்கள்), ஆலந்தூர்(கண்டோன்மெண்ட் மண்டல்), பல்லாவரம், தாம்பரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் அடங்கும். இதன் மாவட்ட தலைவராக செம்பாக்கம் அ.வேதசுப்பிரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார். தாம்பரம் மாநகராட்சி பகுதியை செங்கல்பட்டு வடக்கு மாவட்டமாக அறிவித்து, 3வது முறையாக மாவட்ட தலைவராக அ.வேதசுப்பிரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.